என் மலர்
நீங்கள் தேடியது "பாடலாசிரியர்"
- பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
- 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்
அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.
இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது
- சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பாடல் எழுதிய, 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் மிரட்டல் வந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

அந்த நம்பரை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அது கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது. ஆனால் அவரது போனில் இன்டர்நெட் வசதி இல்லை என்று தெரியவந்தது. அவரை விசாரித்ததில் மார்க்கெட்டில் வைத்து ஒருவருக்கு தனது போனை பயன்படுத்தக் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அவரது போனில் ஒடிபி ஒன்றும் கண்டறியப்பட்டது.
விசாரித்ததில் சோஹைல் பாஷா என்ற நபர் அந்த நபரின் போனை வாங்கி அதில் ஓடிபி நம்பர் பெற்று அந்த நம்பர் மூலம் தனது போனில் வாட்சப் செயலி பதிவிறக்கம் செய்து இந்த மிரட்டலை விடுத்ததாக கண்டறியப்பட்டது. டிவிஸ்ட் என்னவென்றால் இந்த சோஹைல் பாஷாதான் 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியர் என்றும் என்றும் தனது பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்த்து தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதால் இதையும் அந்த கும்பலே விடுத்திருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என சோஹைல் நினைந்துள்ளார். ஆனால் தற்போது குட்டு வெளிப்பட்ட நிலையில் ராய்ச்சூரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடந்த மும்பைக்கு அழைத்துச் சென்றது.
லாரன்ஸ் பிஷனோய் - சாலமன் கான் பகை
சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது.
மேலும் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என மிரட்டல் விடுத்தது.எனவே சல்மான் கானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று வாட்ஸ் அப் செயலி மூலம் வந்தது.