search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொட்டு அம்மான்"

    • கொல்லப்பட்டுவிட்டதாக சிங்கள ராணுவம் அப்போதே அறிவித்தது.
    • உயிருடனேயே இருக்கிறார் என்றும் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இலங்கையில் தனித்தமிழ் நாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் இயக் கத்தின் தலைவர் உலகத் தமிழர்களால் மாவீரன் என்று அழைக்கப்படும் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்டப்போரில் கொல்லப்பட்டுவிட்டதாக சிங்கள ராணுவம் அப்போதே அறிவித்தது.

    ஆனால் தமிழ் ஈழ ஆர்வலர்கள் சிலர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை என்றும் இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் இருந்து வெளியேறிய அவர் தற்போது வரையில் உயிருடனேயே இருக்கிறார் என்றும் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாகரனை போன்று அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகாஆகியோரும் உயிருடனேயே இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விடு தலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பொட்டு அம்மானும் உயிருடன்தான் இருக்கிறார் என்கிற பர பரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவில் தலைவராக இருந்த பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக அவரது தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பொட்டு அம்மானின் தற்போதைய புகைப்படத்தை தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவ ரான வினயரசு வெளியிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, `பொட்டு அம்மானின் தற்போதைய புகைப்படம் உலகத் தமிழர்களால் பரப்பப்பட்டு வருகிறது. அது எங்கு, எப்போது எடுக்கப்பட்ட படம்? என்பது தெரிய வில்லை. பொட்டு அம்மானை பொருத்த வரையில் அவர் எப்போதும் முகத்தை சற்று மேலே உயர்த்தி தான் பார்ப்பார். இந்த புகைப்பட மும் அது போன்று தான் உள்ளது என்றார்.

    இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது பிரபாகரனுடன் பொட்டு அம்மானும் இலங்கையில் இருந்து அவருடன் வெளியேறிவிட்டதாகவே தற்போது தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

    மூன்று வாகனங்களில் பிரபாகரன் குடும்பத்தினர் தப்பி சென்றதாகவும் அவர்களோடு பொட்டு அம்மானும் சென்று விட்டதாகவும் புதிய தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கூறும் போது, `பொட்டு அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தலைவராக பொறுப்பேற்ற பிறகு புலனாய்வு பிரிவு பலமானது.

    பிரபாகரனின் மெய்க்காப்பாளராகவும் பொட்டு அம்மான் பணிபுரிந்துள்ளார். அவரை பற்றி இதற்கு முன்னரும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016-ம் ஆண்டில் இருந்து பொட்டு அம்மான் தமிழ கத்தில் பதுங்கி இருந்து ரகசிய பெயருடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால் இதனை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது என்றும் கூறி உள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பினர் அனைவருமே ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிவரும் நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தொடர்ந்து அந்த அமைப்பில் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மானும் உயிரோடு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் காரணமாக இலங்கையைச் சேர்ந்த உளவு பிரிவினரும் உஷாராகி கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×