என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவப் படிப்பு"

    • தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பல மாவட்டங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 1,400 மக்கள் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.

    80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைப்பதால் மக்களின் 700 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏழைக் குழந்தைகளும் மருத்துவப்படிப்பினை கற்கும் வகையில் தமிழ்மொழியில் பாடத்திட்டங்களை உருவாக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்.

    மருத்துவ படிப்புகளை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதே விருப்பம், அதற்கான வழியை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
    • தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கியது. இதனால் இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்தன. பாராளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

    நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

    நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க BanNEET என்று கூறியுள்ளார்.


    ×