search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்"

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக வெளிநாடு பயணம்.
    • தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

    இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார். இந்த 6 மாதங்களும் தலைவர் இல்லாமல் இருந்தால் கட்சி பணி தொய்வடையும் என்று கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டாக்டர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் புதிய தலைவரை நியமிப்பது பற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஏற்கனவே இதேபோல் அண்ணாமலை 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது புது தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

    ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமையிடமும் அறிக்கை பெற்றுள்ளது. தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாடு முழுவதும் ௧௦-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் பதவி காலியாக உள்ளது. அது தொடர்பாகவும் பல தலைவர்கள் பெயர்களை டெல்லி மேலிடம் பரிசீலிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கூடுதலாக யாருக்காவது கவர்னர் பதவி வழங்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    ×