என் மலர்
நீங்கள் தேடியது "பத்தினம்திட்டா"
- பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்.
- 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
மழை காலத்தில் மாணவ-மாணவிகள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்து காலையிலும் அது தொடரும் என்ற பட்சத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும்.
காலநிலைக்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யும் போது விடுமுறை அறிவிப்பும் காலையில் தான் வெளியிடப்படும்.
விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மழை பெய்வதை பார்த்து இன்று பள்ளிக்கு விடுமுறையா? இல்லாயா? என்று கலெக்டரின் முகநூல் பக்கத்தில் மாணவ -மாணவிகள் நேரடியாக கேள்வி கேட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த வரும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமைக்கு தகுந்தவாறு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இன்றைக்கு பள்ளி விடுமுறையா? இல்லையா? என்று நேரடியாக கேள்வி கேட்டி ருக்கின்றனர். ஏராளமானோர் கலெக்டரிடம் அந்த கேள்வியை கேட்டனர்.
மாணவ-மாணவிகள் அந்த கேள்விக்கு கலெக்டரும் பதில் தெரிவித்து பதிவு வெளியிட்டார். அவரது பதிவில் "விடுமுறை இல்லையே, பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பள்ளி மாணவர்களின் கேள்விக்கு கலெக்டர் அளித்திருக்கும் பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கலெக்டரின் இந்த பதிவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் "லைக்" செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஒரு தலித் தடகள வீராங்கனையாவார். மாணவி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் விளையாட்டிலும், படிப்பிலும் அவரது ஆர்வம் குறைந்தது.
இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அவரை தனியாக அழைத்து கவுன்சிலிங் நடத்தினர். அப்போது, தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி கூறிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆரம்பத்தில் ஆண் நண்பர் என்னிடம் தொடர்பில் இருந்தார். பின்னர் ஆபாச காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அவரது நண்பர்களும் என்னை மிரட்டி என்னை பணிய வைத்தனர். இந்த விவரம் உடற்கல்வி ஆசிரியருக்கு தெரியவர அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்தார்.
மேலும் 2, 3 பேர் கூட்டு சேர்ந்தும் பலாத்காரம் செய்துள்ளனர். அதேபோல் விளையாட்டு தொடர்பாக, வெளியிடங்களுக்கு செல்லும் போதும், அங்குள்ள முகாம்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலவும் திட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து விசாரித்த போலீசார் முதல் கட்டமாக 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாதிக்கப்பட்ட மாணவி தந்தையின் நண்பர்கள் உள்பட 13 பேரை உடனடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் மாணவி 13 வயதாக இருந்த போது ஆண் நண்பர் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அந்த மாணவியின் வாழ்க்கையை ஒவ்வொருவராக சீரழித்துள்ளனர்.
ஆண் நண்பர், அவருடைய நண்பர்கள், மாணவர்கள், தந்தையின் நண்பர்கள், உடற்கல்வி ஆசிரியர் என பட்டியல் நீள்கிறது.
தற்போது கைதானவர்களில் 18 வயதை எட்டாத 2 மாணவர்களும் உள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்றும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்றும், காரிலும், விடுதிகளிலும் வைத்து 60-க்கும் மேற்பட்டோர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 6 போலீஸ் நிலையங்களிலும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், மாணவியின் தந்தைக்கு நெருக்கமான நண்பர்கள் 32 பேர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுவரை மாணவியின் வாழ்க்கையை சீரழித்த 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆதி திராவிடர் என்பதால் எஸ்.சி எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
- கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.
- விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல்நலம் பாதித்தது போல் சோர்வாக இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
அப்போது தனது 13 வயதில் இருந்து, பலரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய மாணவி, தன்னை சீரழித்தவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 20 பேரை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் இருந்தனர்.
காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்கள் மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாணவி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்தபடி உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பள்ளி மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணைய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களின் விசாரணையை உடனடியாக தொடங்கினர். அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.
- அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
- தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்த அவரது காதலன், காதலனின் நண்பர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாளப்புழாவை சேர்ந்த அபிஜித் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 2பேர் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.
விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார்.
- மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். வீராங்கனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்தவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று வரை வீராங்கனையின் காதலன், அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், 18 வயதுக்கும் உட்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் 6 வழக்குகளில் வீராங்கனை ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.