என் மலர்
நீங்கள் தேடியது "மன் கி பாத் நிகழ்ச்சி"
- விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
- கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
பிரதமர் மோடி ஒவ்வொறு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உடையாற்றுகிறார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பல பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது அவர் ஆந்திர மாநிலம் 'அரக்கு காபி', கேரள மாநிலம் 'கார்தும்பி குடைகள்' பற்றியும் பேசினார். 'கார்தும்பி குடைகள்' பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:-
கேரள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும் 'கார்தும்பி குடைகள்' சிறப்பு வாய்ந்தவை. இந்த வண்ணமயமான குடைகளை கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.
இன்று இந்த குடைகளின் தேவை நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த குடைகள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. வத்தலக்கி கூட்டுறவு விவசாய சங்கத்தின் மேற்பார்வையில் 'கார் தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகின்றன. இந்த சமூகம் பெண் சக்தியால் இயக்கப்படுகிறது.
பெண்களின் தலைமையின் கீழ் அட்டப்பாடி பழங்குடி சமூகம் முன்முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணத்தை உருகாக்கியுள்ளது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் `கார் தும்பி குடைகள்' மற்றும் அதனை தயாரிக்கும் பழங்குடியின பெண்கள் பற்றி பிரதமர் மோடி பேசியிருப்பது கேரளாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் `கார் தும்பி குடைகள்' தயாரித்துவரும் அட்டப்பாடி பழங்குடியின பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்த பழங்குடியின கிராம பெண்களால் 'கார்தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப சமூகம் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து 'கார் தும்பி குடைகள்' இந்த பருவமழையில் சந்தைக்கு வந்துள்ளன.
சுமார் 50 முதல் 60 பழங்குடியின பெண்கள் `கார் தும்பி குடைகள்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு 20-30 குடைகளுக்கும், அவர்கள் தினமும் 600 முதல் 800 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தற்போது பல இ-காமர்ஸ் இணையதளங்களில் குடைகள் ரூ.350-390க்கு விற்கப்படுகின்றன.
- சமூக உணர்வோடு சமுதாயத்துக்கு ஆற்றும் பணிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகிறது.
- ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் பேசி வருகிறார். இன்று தனது 114-வது உரையில் மோடி கூறியதாவது:-
நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நான் அமெரிக்கா சென்றபோது இந்தியாவை சேர்ந்த 300 கலைப்பொருட்கள் மீட்டு கொண்டு வரப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தனது தனிப்பட்ட இல்லத்தில் கலைப்பொருட்கள் சிலவற்றை எனக்குக் காட்டினார். மீட்ட கலைப்பொருட்கள் டெரகோட்டா, கல், தந்தம், மரம், தாமிரம் மற்றும் வெண்கலம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டவை.
சில மொழிகள் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட மொழிகளில் ஒன்று நமது 'சந்தாளி' மொழியாகும். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் சந்தாளிக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடுதல் ஒரு அற்புதமான பிரசாரம். உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்துள்ளன.
மனதின் குரல் நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோவிலுக்கு சென்று கடவுளைப் பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்துக்கு ஆற்றும் பணிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி உணர்ச்சிமிக்க அத்தியாயமாகும். இந்தியாவின் உணர்வை கொண்டதாகும். மக்கள் நேர்மையான விஷயங்கள், ஊக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டுகள் கதைகளை விரும்புகிறார்கள்.

மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐ) அதிகரிப்பு அதன் வெற்றிக்கு சாட்சியாகும் . இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.
கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும்.
புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் முற்றிலும் தூய்மைபடுத்துகின்றனர்.
இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
- அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.
- தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி கூறும்போது, `நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர், அதிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ. இவர் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அவரது தந்தையை பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற பாரம்பரிய மூலிகைகள் உதவியது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். அவர் மதுரை வெரிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை கடினமாக உழைத்து உருவாக்கி உள்ளார்.
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை மக்களுக்கு வழங்கினார். இவரது மூலிகைத் தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த நமது பாரம்பரியத்தை சுபஸ்ரீ முன்னெடுத்துச் செல்கிறார். அவரது மூலிகை தோட்டம் நமது கடந்த காலத்தை எதிர் காலத்துடன் இணைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றார்.
- டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் வானொலியில் உரை யாற்றி வருகிறார். இன்று 115-வது நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. இன்று மன் கி பாத்தில், தைரியமும் . தொலைநோக்கு பார்வையும் கொண்ட 2 பெரிய ஹீரோக்கள் பற்றி நான் விவாதிக்கிறேன். அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது.
சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நவம் பர் 15 முதல் தொடங்குகிறது. இந்த 2 பெரிய மனிதர்களுக்கும் வெவ்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் நாட்டின் ஒற்றுமை'தான் அவர்களின் பார்வையாக ஒரே மாதிரியாக இருந்தது.
இந்த பண்டிகை காலத்தில், ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்த பிரச்சாரத்தை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம். இந்தியாவை நாம் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவது மட்டுமின்றி, புதுமைகளின் உலகளாவிய சக்தியாக நம் நாட்டை நிலைநிறுத்த வேண்டும்.
இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அனிமேஷன் துறை இன்று மற்ற தொழில்களுக்கு பலம் கொடுக்கும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது.
உலக அனிமேஷன் தினம் அக்டோ பர் 28 அன்று (நாளை) கொண்டாடப்படும். உலக ளாவிய அனிமேஷன் அதிகார மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி அளிக்க வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது நமது கொள்கையாக மட்டும் மாறவில்லை. அதுவே நமது ஆர்வமாகவும் மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சில சிக்கலான தொழில்நுட்பங்கள் உருவாகின்றன என்று யாராவது சொன்னால் பலர் அதை நம்பமாட்டார்கள். பலர் அதை கிண்டல் செய்வார்கள்.
ஆனால் இன்று அதே மக்கள் நாட்டின் வெற்றியைக் கண்டு வியக்கிறார்கள். தன்னிறைவு பெற்ற இந்தியா, அனைத்து துறைக ளிலும் அதிசயங்களைச் செய்து வருகிறது.
ஒரு காலத்தில் செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா இன்று 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
விண்வெளி தொழில்நுட்பத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சைபர் மோசடி விவகாரத்தை சமாளிக்க மாநிலங்களுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. இதுபோன்ற குற்றத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.