என் மலர்
நீங்கள் தேடியது "சட்டவிரோத பணப்பரிமாற்றம்"
- கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.

இந்த நிலையில் சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
- பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைசியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காந்தபுரத்தை சேர்ந்தவரான ஃபைசியை நேற்று இரவு பெங்களூரில் வைத்து கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து ஃபைசி கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமைப்புகளின் நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.