என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யு.பி.எஸ்.சி."

    • தேர்வு முடிவுகளை upsc.gov.in. என்ற முகவரியில் தேர்வர்கள் காணலாம்
    • யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்தியா முழுவதும் ஜூன் 16ம் தேதி நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

    இந்த தேவை 13.4 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை upsc.gov.in. என்ற முகவரியில் தேர்வர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
    • இன்னமும் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் இன்னமும் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    பயிற்சி ஐ.ஏ .எஸ். பூஜா கேட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், போலி சான்றிதழ் விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    • கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.
    • 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்குமுன் தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததையடுத்து, ப்ரீத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவியேற்கவுள்ளார்.

    கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் 29 வரை இப்பதவியில் இருப்பார். 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    யுபிஎஸ்சியின் 2 ஆவது பெண் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு ஆர் எம் பாத்யூ என்பர் யுபிஎஸ்சியின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    ×