என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை அதிகாரிகள்"
- தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
- தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
- 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சு கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளினிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.
மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த நர்சு கலைமணி, சேலத்தை சேர்ந்த நர்சு அம்பிகா, ஆத்தூர் பகுதியை சேர்ந்த நர்சுகள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மா ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள ஒரு கிளினிக் ஆகிய 3 இடங்களிலும் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அந்த மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை எடுத்து சென்று அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். அதில் இதுவரை எத்தனை பெண்களுக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்தபோது 3 ஆஸ்பத்திரிகளிலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சேலம் டவுன் மேட்டுத்தெரு மற்றும் பொன்னம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளை மூடவும், பெரிய புதூரில் உள்ள கிளினிக் அனுமதியில்லாமல் செயல்பட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாத ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்து சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.