என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்"
- அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும்.
- 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியா -பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது தொடர்பான முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதிலும், எளிதாக்குவதிலும் எங்களால் ஒரு பங்கை ஆற்ற முடிந்தால், அதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதே உலக கிரிக்கெட்டுக்கான சவால் என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகள் முன்னேறும். அதுபோல ஒவ்வொரு தொடரிலும் இருக்க வேண்டும்.
வெள்ளை பந்து தொடருக்கும் இதே போன்ற ஒன்று தேவை. தரவரிசை மற்றும் இதர வழிகள் முறையே உலகக் கோப்பைகளுக்கான தகுதி இருக்க வேண்டும்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு இரு கிரிக்கெட் வாரியங்களின் கையில்தான் உள்ளது.
என்று நிக் ஹாக்லி கூறினார்.
- சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர்.
- 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64-வது நபராக ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் விழா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.
12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார். சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56-க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க். 43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5 என ஆஷஸ் தொடரினையும் 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.