search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீபிக் மூளைக்காய்ச்சல்"

    • காய்ச்சலுக்கு கேரளாவில் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.
    • அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பும் வழிமுறைகளை அரசு தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குதற்கு முன்னதாகவே பல்வேறு வித காயச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. பருவமழை பெய்ய தொடங்கியதும் அவற்றின் பாதிப்பு மேலும் அதிகரித்தது.

    காய்ச்சல்களில் டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் மட்டுமின்றி நைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு, அதில் வாழும் அமீபாக்கள் மூலம் ஏற்படுகிறது.

    அதாவது குளிப்பவர்களின் காதுமடல் மற்றும் நாசி துவாரத்தின் வழியாக மூளைக்கு சென்று அமீபா தாக்குகிறது. இதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு கேரளாவில் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.


    அவர்களில் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பும் வழிமுறைகளை அரசு தெரிவித்தது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக அசுத்தமான தண்ணீர் தேங்கியிருக்கக் கூடிய குளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனி வார்ட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அமீபிக் மூளைக்காயச்சல் தொற்று பாதிப்புக்கு உள்ளான 10 பேர் புரண குணமடைந்திருக்கிறார்கள்.

    இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். கேரளாவில் இதுவரை அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 14 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது ​​4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம் கன்னரவிளையை சேர்ந்த அகில் (26) என்பவர் கடந்த ஜூலை 23 அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார்.

    அகில் தனது நண்பர்கள் அனிஷ் (26), அச்சு (25), ஹரிஷ் (27), தனுஷ் (26) ஆகியோருடன் குளத்தில் குளித்தபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 4 பேர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4-வது நபருக்கும் அறிகுறிகள் உள்ளது. ஆனால் இன்னும் சோதனை முடிவுகள் வரவில்லை.

    நிலைமையின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநில அதிவிரைவு குழு கூட்டத்தை கூட்டினார் (RRT) கூட்டத்தை கூட்டினார்.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு எச்சரித்த அமைச்சர், குளிக்கும்போது நாசிக்குள் தண்ணீர் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

    மேலும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில் தீவிர தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அகில், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத் துறையினர், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய, பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரிகளை சேகரித்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருந்ததை தொடர்ந்து பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.

      டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டு மின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் , நிபா வைரஸ் உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்களும் பரவியது.

      தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலம் அதில் உள்ள அமீபாக்கள், குளிப்பவரின் மூக்கு துவாரம் மற்றும் காதுமடல் வழியாக மூளைக்கு சென்று தாக்கு வதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் சிறுவர்களை பாதித்து வருகிறது.

      இந்த தொற்று பாதித்த மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி, கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாத காலத்துக்குள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

      இந்நிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த கோழிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான்.

      அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்தால் உயிர் தப்புவது மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோடு சிறுவன் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தான்.

      இந்தநிலையில் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக் கிறான். கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவ னுக்கு, அமீபிக் மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தீவிர சிகிச் சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டான்.

      அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சமீபத்தில் தளிபரம்பா அருகே உள்ள அருவியில் அந்த சிறுவன் குளித்திருக்கிறான். அப்போது அவனுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

      • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
      • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

      தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

      தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

      கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

      தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

      அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

      மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

      அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

      கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

      புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

      • அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.
      • 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

      திருவனந்தபுரம்:

      கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

      கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

      கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

      வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் பரிதாபமாக இறந்தான். கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

      ×