search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர் ஸ்டாமர்"

    • பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
    • இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கீர் ஸ்டாமர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கீர் ஸ்டாமருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கீர் ஸ்டாமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.

    இரு நாடுகளும் பலனடையும் இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த விரைந்து பணியாற்றுவது என முடிவுசெய்யப்பட்டது.

    பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டிய இருவரும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர் என தெரிவித்துள்ளது.

    • தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
    • பிரதமர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

    இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
    • அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வந்தார். பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.

    650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

    தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர். தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டாமர் பிரிட்டனின் புதிய பிரதமர் ஆக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "மாற்றத்திற்கான பணிகள் துவங்குகின்றன. ஆனால் நாம் பிரிட்டனை மீண்டும் கட்டமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்," என்றார்.

    "நம் நாட்டின் முதல் பிரிடிஷ்-ஆசிய பிரதமராக அவர் செய்த சாதனைகளுக்கு தேவையான கூடுதல் முயற்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு இன்று அடையாளம் காண்கிறோம். மேலும் அவர் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்த அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறோம்."

    "எனது அரசாங்கத்தில் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கட்சி மீது அதன்பிறகே கவனம் செலுத்தப்படும். இன்றைய உலகம் நிலையற்ற ஒன்றாக இருக்கிறது. இதற்கு சிறிது காலம் தேவைப்படும், ஆனால் மாற்றத்திற்கான பணிகள் உடனே துவங்கிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்," என்று தெரிவித்தார்.

    ×