search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஆர்.எஸ் கட்சி"

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.
    • ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அப்போது ஆந்திரா தெலுங்கானா பிரிவினையால் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது.

    தெலுங்கானாவில் பிரதான ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.

    ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி பிரிவு மீண்டும் தொடங்கப்படும்.

    இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் மீண்டும் கட்சியை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் அறிவித்தார். தெலுங்கானா மக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அவர் கூறினார்.

    தெலுங்கானா முதல்-மந்திரியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த மாநில அரசியலில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்துவது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×