search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடைகள்"

    • பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.
    • துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் மற்றொரு சாரார் தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி இன்றியமையாதது என்று கருதுகின்றனர். இந்த துப்பாக்கி விவாதம் அமெரிக்க அரசியலிலும் எதிரொலிக்காமலில்லை. இந்நிலையில் ஏற்பகுறைய அமேரிக்காவில் பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.

     

    எனவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல துப்பாக்கிக் குண்டுகளை உடனுக்குடன் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும்  வசதி மாளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏஐ தொழிநுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்தில் பாசில் ரெகக்னிஷன் மூலமும் வாடிக்கையாளர் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி  தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம்.

     

     

    முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஒக்லாஹோமா ஆகிய மாகாணங்களில் உள்ள மளிகைக் கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதியை மேலும் பல்வேறு மாகாணங்களுக்கு விரிவு படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×