search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்எஸ்எல்வி டி3"

    • எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைகோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும். பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளுக்கு இதுவரை தேவையான உதிரி பாகங்களை தனியாரிடம் பெற்று வந்தோம். தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக இனி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்த படி பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும்.

    தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைகோள்கள் இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். நிறுவன மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.

    எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.

    தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது விஞ்ஞானிகள் ராஜராஜன், நாராயணன், சங்கரன், வினோத், அவினாஷ் உள்பட பலர் இருந்தனர்.

    • 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும்.
    • சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் திட்டமிட்ட திசையில் சரியாக பயணித்தது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும்.

    சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
    • 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    • எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது.
    • பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்கிறது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    • உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
    • எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.

    சென்னை:

    சிறிய வகையிலான மைக்ரோ மற்றும் நானோ வகை செயற்கைக்கோள்களை தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்ணில் ஏவி வந்தது. இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுவதால் சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக, 'சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்' (எஸ்.எஸ்.எல்.வி.) ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்தது.

    இவை செலவு குறைந்த ராக்கெட்டாகும். தொழில் துறை உற்பத்திக்காக இந்த வகை ராக்கெட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை செயற்கைக்கோள்கள் தேவைக்கு ஏற்ப தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.

    தனித்துவமான இந்த வகை ராக்கெட்டுகள் 3 நிலை கட்டமைப்புகளை கொண்டிருக்கும். உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை வேகத்தை பயன்படுத்தி துல்லியமான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் சக்தி படைத்தது.

    இந்தவகையில் முதல் எஸ்.எஸ்.எல்.வி.டி.-1 ராக்கெட், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த பணி அதன் நோக்கத்தை அடையவில்லை.

    எனினும் இஸ்ரோ இந்த ராக்கெட்டில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டு, அடுத்து வந்த ராக்கெட்டில் அவற்றை பயன்படுத்தவும் திட்டமிட்டது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. இதை கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதிசாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் தொழில்துறையினருக்கு செலவு குறைந்த ராக்கெட்டுக்களுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×