search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்ஸ்ட்ராங்க் கொலை"

    • வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
    • ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங்க், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது வக்கீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புகை படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்கரசுப்பு, சத்தியச்சந்திரன், ரஜினிகாந்த், ரமேஷ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டனர்.

    ×