என் மலர்
நீங்கள் தேடியது "மாநில தலைமைச் செயலாளர்கள்"
- நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரம்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம், பணப்பலன்கள் அளிக்காத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊதியம், பணப்பலன்களை 2வது தேசிய நீதிசார் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் அகில இந்திய நீதிபதிகளின் சங்கத்தின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ்.பரமேஸ்வர் ஆஜராகி உத்தரவை செயல்படுத்தாக மாநிலங்களின் விவரத்தை அறிவித்தார்.
இதை பதிவு செய்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஊதியம் மற்றும் பணப்பலன்களை அளிக்கும் உத்தரவை வரும் 23ம் தேதிக்குள் செயல்படுத்தவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.