search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சம்பழம்"

    • பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது.
    • பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த நீரிழிவு நோய்.

    உலகளவில் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. இந்த வகை நீரிழிவு நோயைத் தவிர்க்க சில ஆரோக்கியமான உணவுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியமாகும்.

    அந்த வகையில் நீரிழிவு நோயைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் பேரிச்சம்பழ விதை பவுடர் பெரிதும் உதவுகிறது. அதென்ன பேரிச்சம்பழ விதை?

    இன்று பெரும்பாலானோர் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு, பேரிச்சம்பழ கொட்டையைத் தூக்கி எறிகின்றனர். ஆனால், பேரிச்சம்பழம் மட்டுமல்லாமல் அதன் விதைகள் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிச்சம்பழ விதை பவுடர் தரும் நன்மைகளைக் காணலாம்.

    பேரிச்சம்பழம் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்காக மிகவும் பெயர் பெற்றதாகும். ஆனால், இதன் விதைகளை நம்மில் பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறோம்.

    ஆனால், இந்த பேரிச்சம்பழ விதைகள் சத்தானதா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதிலும் குறிப்பாக இதை தூளாக அரைத்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அதில் ஒன்றே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகும்.

    பேரிச்சம்பழத்தினைப் போலவே, பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பேரிச்சம்பழ விதைகள் டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள் மற்றும் ஒலிக் அமிலம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

    இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

    எனவே, இவை நீரிழிவு நோயாள் அல்லது நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

    பேரிச்சம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    பேரிச்சம்பழ விதை பவுடரை தயார் செய்யும் முறை

    * முதலில் குறிப்பிட்ட அளவிலான பேரிச்சம்பழ விதைகளை எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர வைக்கலாம்.

    * பின்னர், விதைகளை கடாய் ஒன்றில் சேர்த்து, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் விதைகள் எரிக்கப்படாமல் அல்லது கருகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும், இந்த விதைகள் மிருதுவாகும் வரை கையால் நசுக்க வேண்டும்.

    இவ்வாறு வறுத்த விதைகளை கைகளால் நசுக்கி பிறகு மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமிக்க பேரிச்சம்பழ விதைத்தூள் தயாராகி விட்டது.

    இந்த பொடியை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் கலந்து தினந்தோறும் காலை நேரத்தில் குடிக்கலாம்.

    கவனிக்க வேண்டியவை

    பேரிச்சம்பழ விதைகள் சாத்தியமான பலன்களைத் தருவதாக இருப்பினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். முதலில் மெதுவாகத் தொடங்கி, உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.

    குறிப்பாக வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருப்பின், எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன்னர் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.

    ×