search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா"

    • கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மதுவிலக்கு திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ம் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.

    இதையடுத்து, தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்தது. அந்த சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படடது. இதையடுத்து, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது

    என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஜாமினில் வெளியே வரமுடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×