search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் தாக்குதல்"

    • ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் 'பீகாரின் லெனின்கிராட்' என்று அழைக்கப்படும் பெகுசராய் பகுதி உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை சிலர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    அங்குள்ள லக்மினியா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரோஷன் குமார், ஜெய்ராம் சவுத்ரி, ககுல் குமார் என்ற 3 பேர் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சில பொருட்களை அந்த சிறுவன் திருடியதாக சந்தேகம் அடைந்து அந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புகாரை சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டில் தனது மகனை ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து தாக்கியதாக அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×