என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவன் தாக்குதல்"
- ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் 'பீகாரின் லெனின்கிராட்' என்று அழைக்கப்படும் பெகுசராய் பகுதி உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை சிலர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.
அங்குள்ள லக்மினியா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரோஷன் குமார், ஜெய்ராம் சவுத்ரி, ககுல் குமார் என்ற 3 பேர் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சில பொருட்களை அந்த சிறுவன் திருடியதாக சந்தேகம் அடைந்து அந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புகாரை சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டில் தனது மகனை ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து தாக்கியதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவனை கதவை பூட்டி பலமாக தாக்கி உள்ளார்.
- காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவர்ஷன் (வயது 9). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவன் சத்தியவர்ஷனை அழைத்து, காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது. அப்போது சத்தியவர்ஷன் நான் எழுதவில்லை எனக் கூறிய நிலையில், அதைக்கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி சத்தியவர்ஷனை பலமாக தாக்கி உள்ளார்.
இதற்கிடையே சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது மோகன் வீட்டில் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே, உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 2 பேர் மோகன் வீட்டிற்குள் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வராஜ், கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.