search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண கொண்டாட்டம்"

    • திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் மது இல்லாமல் திருமண கொண்டாட்டமா?... என்கிற நிலை நிலவுகிறது. மணமகன் மது அருந்தி வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள், திருமண விருந்தில் சிக்கன் பீஸ் இல்லாததால் மது போதையில் உறவினர்கள் செய்த ரகளையால் நின்ற திருமணம் என்பதுபோன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

    அந்த வகையில், திருமண கொண்டாட்டத்தின் போது திறந்தவெளியில் காரில் மது அருந்திய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    உத்தரபிரதேசம் மாநிலம் செக்டார் 73 இல் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹைதர் (30), அர்ஜூன் (20), அஜித் (21), மற்றும் பிரதீக் தனேஜா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

    ×