என் மலர்
நீங்கள் தேடியது "ஊதியக்குழு"
- மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடக சட்டசபையில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழுவினர் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 27.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது
- 8 ஆவது ஊதியக்குழுவின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக்குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அமைச்சரவையில், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.