search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னடர்கள்"

    • தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதா.
    • கர்நாடகாவில் இருந்த இடம்பெயர விரும்பினால் விசாகப்பட்டினத்திற்கு வரலாம்.

    கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

    சித்தராமையா இது தொடர்பான தகவல்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதனால் எக்ஸ் பக்க பதிவை நீக்கினார்.

    பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமும் (Nasscom- National Association of Software and Service Companies) எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய ஏமாற்றத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. விசாகப்பட்டினத்திற்கு உங்களுடைய நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய அல்லது மாற்ற நாங்கள் வரவேற்கிறோம்.

    உங்களுக்க சிறந்த வசதிகளை செய்து தருகிறோம். தடையில்லா மின்சாரம், கட்டமைப்புகள் உருவாக்கி தருகிறோம். உங்களுக்கு தேவையான அறிவு சார்ந்த ஆட்கள் தேர்வுக்கு எந்த தடையும் அரசு விதிக்காது. உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்!" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என்றார்.
    • தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நிறுத்தி வைப்பு.

    கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

    இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, "கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

    • கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
    • சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மநாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே தனியார் துணை பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பண்பாடு, கலாச்சாரம் போல வேலைவாய்ப்பு விவகாரத்திலும் அரசு கவனம் செலுத்தும். இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    • தனியார் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்.
    • தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் எக்ஸ் பதிவை நீக்கிய சித்தராமையா.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி சந்தோஷ் லாத் "தனியார் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பதவி (non-management roles) பணிகளில் 70 சதவீதம், நிர்வாகம் தொடர்பான பணிகளில் 50 சதவீத இடங்களும் கன்னட மக்களுக்கு வழங்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த மசோதா பாரபட்சமானது என தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

    மணிபால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் சேர்மன் மோகன்தாஸ் பாய் "இந்த மசோதா பாகுபாடானது. பாரபட்சமானது. இது விலங்குகள் பண்ணை 'Animal Farm' (the George Orwell novel) போன்ற பாசிச மசோதா" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் "இந்தக் கொள்கையிலிருந்து மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்க வேணடும். தொழில்நுட்ப மையமான எங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேவை. உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே நோக்கமாக இருக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை பாதிக்கக்கூடாது" என்றார்.

    • கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
    • கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும்

    கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ×