என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயில்கள்"

    • அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
    • திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    பெங்களூரு நகரில் கடந்த 7 ஆண்டுகளாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை திருடிய 2 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    திருடர்களை கைது செய்த பின்பு அவர்களது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, 715 -ற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் ஆகும். 

    இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

    திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    அண்மையில், வித்யாரண்யபுரா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷூக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக வீட்டுக்காரர் புகார் கொடுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விவரங்களை கண்டறிந்து 2 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    • தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
    • உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.

    மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×