search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரப்ஜோத் சிங்"

    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சரப்ஜோத் சிங் மற்றும் ஜெர்மனி வீரர் ஆகியோர் தலா 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
    • சரப்ஜோத் சிங் 16x, ஜெர்மனி வீரர் 17x பெற்றிருந்ததால் வாய்ப்பை இழந்தார்.

    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்று இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 33 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 10 முறை இலக்கை நோக்கி சுட வேண்டும். மொத்த புள்ளிகள் கணக்கிடப்பட்டு முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்திய வீரரான சரப்போஜத் சிங் தொடக்கம் மற்றும் ஐந்தாவது சுற்றில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் 94 புள்ளிகளும், 5-வது சுற்றில் 93 புள்ளிகளும் பெற்றார். 4-வது சுற்றில் 100 புள்ளிகள் பெற்று அசத்தினார். மொத்தமாக 577 புள்ளிகள் பெற்றார். இதில் 16 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார்.

    அதேவேளையில் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர், துருக்கி வீரர் இஸ்மாயின் கெலேஸ் ஆகியோரும் 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

    ஆனால் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர் 17 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார். சரப்ஜோத் சிங் 16 முறைதான் துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டதால் 9-வது இடம் பிடித்து பதக்கப்போட்டிக்கான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூழிலையில் இழந்தார்.

    மற்றொரு வீரர் அர்ஜுன் சிங் சீமா 574 (17 முறை 10) புள்ளிகள் பெற்றி 18-வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார்.

    ×