search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கா பூஜை"

    • செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.
    • செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    வாழ்க்கையில் நன்கு வசதியோடு வாழ வேண்டுமென்றால் விஜயலட்சுமியை வழிபட வேண்டும்.

    விஜயலட்சுமியை முறைப்படி வணங்கினால் வெற்றி கிட்டும்.

    முதல் நாள் பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கவேண்டும். ஆனால் அன்று தேய்பிறையாகவோ அஷ்டமி நவமியாகவோ. கரிநாளாகவோ இருக்கக்கூடாது. அவ்வீட்டில் இறந்தவர் எவருக்கேனும் திதி நாளாயும் இருக்கக்கூடாது.

    மலர்களுள் செந்தாமரை, வன்னி,ரோஜா, மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, சம்பங்கி, மனோரஞ்சிதம் ஆகிய மலர் இனங்களைப் பயன்படுத்தலாம்.

    வீட்டிலுள்ள தூய்மையான அறையில், நடுப்பகுதியில் கிழக்கு முகமாகப் பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லைப்பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு பித்தளைத்தட்டில் பச்ச அரிசியைப் பரப்ப வேண்டும்.

    அதன் மீது மலர்கள் சுற்றப்பட்ட நீர் நிறைந்த செம்பை வைக்க வேண்டும். மாவிலைகளைக் செம்பின் உள் பக்கம் ஒரத்தில் வைக்க வேண்டும்.

    செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.

    செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    வாயிலில் மாக்கோலம் இட வேண்டும். பூஜை தொடங்கும் போது வாசலில் அகல் விளக்கேற்ற வேண்டும்.

    பிரசாதமாகத் தயாரித்த போருள்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பிக்கலாம்.

    இந்தப் பூஜையைத் தனியாகவோ பலர் கூட்டாகவோ செய்யலாம்.

    முதலில் விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு, அருகம் புல்லால் அர்ச்சனை செய்து,கற்பூர தூப தீபம் காட்ட வேண்டும்.

    விஜயலட்சுமி பூஜையைத் தொடங்கவேண்டும். நூற்றெட்டு நாமாவளிகளைக் கூறி, மலர் அர்ச்சனை முடிந்து தூப தீபம் காட்டி, வணங்க வேண்டும்.

    பூஜை முடிந்ததும் மூன்று சிறுமிகளுக்கு துணி தானம் என்னும் பட்டுத்துணி, தாம்பூலம், கல்கண்டு, கனி ஆகிய வற்றைத் தர வேண்டும்.

    இயன்ற அளவு பணமும் தானமாகக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்க்குப் பிரசாதங்களைக் கொடுத்து விட்டுத்தாங்கள் பயன்படுத்தலாம்.

    இந்தப்பூஜையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று, தொடர்ந்து இருபத்தொரு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

    இவ்வாறு இருபத்தொரு நாளும் முடித்த பிறகு, எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    வழிபடுவதற்கான குறிப்புகள்

    வடிவம் :- நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை :- 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி :- அஷ்டமி

    கோலம் :- பத்ம கோலம்

    பூக்கள் :- மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

    நைவேத்தியம் :- பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் :- புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் :- நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    • இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபடவேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்தக்கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளைபேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள்&துர்க்கை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும். குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். ஆண்கள்&துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். இளம் பெண்கள்&துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான். வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும். பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.
    • பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும்.

    குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

    எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.

    இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.

    அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும்.

    துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும். அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம்.

    நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார்.

    அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

    பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

    தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.

    அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.

    பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.

    அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    ×