என் மலர்
நீங்கள் தேடியது "கொண்டைக்கடலை"
- தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.
- தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.
மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.
ஒருவரது ஜாதகத் தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குருபார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி.
அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்ய வேண்டும்.
- உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
- கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு வாயு.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சிறிய கவனிக்காமல் செய்த தவறால் மூச்சுத்திணறி இரு இளைஞர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் நொய்டாவின் செக்டார் 70 இல் உள்ள பாசாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் உணவு ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தனர், அங்கு, 'சோலே பத்தூர்' மற்றும் 'குல்சே' உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சமைத்த அவர்கள், மறந்துபோய் அடுப்பை அணைக்காமல் தூக்கியுள்ளனர்.
கொண்டைக்கடலை அடுப்பில் தொடர்ந்து கொதித்துக்கொண்டு இருந்ததால் அறை புகையால் நிரம்பியது. வீட்டின் கதவு மூடப்பட்டதால், அறையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கார்பன் மோனாக்சைடு புகையால் மூச்சுத் திணறி அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
சில மணி நேரம் கழித்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு விஷ வாயு. கார்கள், டிரக்குகள், அடுப்புகள், கிரில்ஸ் மற்றும் ஜெனரேட்டர்களில் எரிபொருளை எரிக்கும்போது இது வெளியேறும். காற்று புகாமல் இறுக்கமாக மூடிய இடங்களிலும் உருவாக்கலாம்.