search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கை புனித நீர்"

    • பாஜக ஆட்சியில் உலக அதிசயமான தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
    • தாஜ்மஹாலில் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்ததாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது கன்வார் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    தன்னை அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என கூறிக்கொண்ட அவர், "தாஜ்மஹால முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

    ×