என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்கள்"

    • கடந்த ஆண்டை விட எதிலும் இந்த பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ₹17,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

    பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

    2047 ல் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் வளரும் இந்தியாவை நோக்கி இந்த ஆண்டு முதலாவதாக புதிய பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது

    கடந்த ஆண்டை விட எதிலும் இந்த பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    விவசாயிகள், வணிகர்கள் என ஒட்டுமொத்த மக்களின் பங்களிப்பில் தான் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்காக இந்திய மக்களுக்கு நான் கூறி கொள்கிறேன்.

    கடந்த சில ஆண்டுகளாக சுயதொழில் என்ற அர்த்தத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

    2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அந்த 17 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா?


    பட்ஜெட் உரையில் ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படாவிட்டால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றன

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எங்களின் அமைச்சர்கள் சென்று விளக்குவார்கள்.

    யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ₹17,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செலவுக்கு ₹12,000 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

    2025-26க்குள் நிதிப்பற்றாக்குறையை 4.5% க்கும் கீழே கொண்டு வருவோம்

    என்று அவர் தெரிவித்தார்.

    • 2026-ல் இந்த இலக்கு முழுமையாக முடிவடையும்.
    • கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வா) திட்டத்தின்கீழ் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல் படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமியப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு சட்டபூா்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

    கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதி நிறுவன கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப் புறங்களில் சொத்துகள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது

    இந்த நிலையில் பிரதமா் மோடி இன்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார். அவா் திட்டப் பயனாளிகள் சிலரிடமும் கலந்துரையாடினார்.

    குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களில் 50,000 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத இலக்கு எட்டப்பட்டது. இதுவரை 1.53 லட்சம் கிராமங்களுக்கு 2.24 கோடி சொத்து அட்டைகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. 2026-ல் இந்த இலக்கு முழுமையாக முடிவடையும்.

    புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர், திரிபுரா, கோவா, உத்தரகாண்ட், அரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டி உள்ளது. இத்திட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் திட்டத்தின் சோதனை கட்டத்தில் மட்டும் பங்கேற்றன. மேற்கு வங்கம், பீகாா், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.


    ×