search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் பலி"

    • ரஷிய ஆயுதப் படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது.
    • அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் உதவியாளர்களாக சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக ஏஜென்டுகள் மூலம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய இளைஞர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ரஷியா ஏற்றுக் கொண்டது.

    இந்த நிலையில் இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய தூதரகம் கூறியதாவது:-

    ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்திய குடிமக்களின் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க ஊடகங்களில் இருந்து பல கோரிக்கைகள் வந்தது. உக்ரைனில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போது இந்தியர்களின் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு இந்திய அரசுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    ரஷியாவில் ராணுவ சேவைக்காக தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்த இந்தியர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை வெளியேற்றுவதற்கு இரு நாடுகளிலும் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன.

    ரஷிய ஆயுதப்படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.

    ரஷிய அரசாங்கம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு குறித்து எந்தவொரு பொது அல்லது தெளிவற்ற பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.

    • போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள்.
    • இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்திய இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு ரஷிய ராணுவத்தில் உதவியாளராக கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

    ரஷிய ராணுவம் சார்பில் ராணுவ உதவியாளர்கள் என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

    இப்போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். அரியானாவை சேர்ந்த ரவிமவுன் (வயது 22) என்பவர் ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் உக்ரைன் போரில் பலியாகி உள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    ஆனால் ரவிமவுன் மரணம் குறித்து அவரது சகோதரர் அஜய் மவுனுக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அதில் ரவிமவுன் மரணத்தை ரஷிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உடலை அடையாளம் காண, நெருங்கிய உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. சோதனை தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி சமீபத்தில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷியா, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×