என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைகள்"

    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு.
    • இதுவரை 3 கால கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    அந்த சட்டத்தை கவர்னர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது.

    அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ந் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

    தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும்.

    ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2022ல் 1,123 மாணவர்கள் தேர்வில் தேல்வி அடைந்ததால் தற்கொலை
    • 2022ல் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை

    மாணவர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மௌசம் நூர் பாராளுமன்றத்தில் இன்று பேசினார்.

    பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 8% பேர் மாணவர்கள் என்றும் இது ஒரு வருடத்தில் 30,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததற்கு சமம். இந்த விவாகரத்திற்கு நாம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தற்கொலை செய்து கொள்பவர்களின் 35% பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இது மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையின் அப்பட்டமான தோல்வியாகும்.

    2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 1,123 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர்.

    இந்தாண்டு 1.8 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இளங்கலை நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

    அதேபோல் வெறும் 39,767 பொறியியல் இடங்களுக்காக JEE மெயின்ஸ் தேர்வை 12.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

    இந்த ஏற்றத்தாழ்வு தான் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. மாணவர்களின் மதிப்பு தேர்வு முடிவுகளுடன் தவறாக இணைத்து பார்க்கப்படுகிறது.

    மிகைப்படுத்தப்பட்ட ஊடக விளம்பரம், சமூக ரீதியிலான அவமானம், கல்வி ஆலோசனை வழங்கப்படுவதில் உள்ள போதாமை மற்றும் வாலைவாய்ப்பின்மை ஆகியவை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

    இந்த ஆண்டு நடைபெற்ற இளங்கலை நீட், முதுகலை நீட், யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.

    நமது நாட்டின் கல்வி நிலை ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாணவர்களின் தற்கொலையும் தேசியளவிலான சோகமாகும். இளைஞர்களை அரசு ஆதரிக்க தவறியதை இது அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

    எனவே, நாட்டின் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையை சீர்திருத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    • வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

    பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    பிரவீன் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×