என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கிரிக்கெட் அகாடமி"

    • முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று சஞ்சு கூறியிருந்தார்.
    • முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் தற்போது என்சிஏவிற்கு சென்றுள்ளார். இந்த பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார். இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

    • ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் உள்ளது.
    • அதிநவீன பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ள சின்னசாமி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய கிரிக்கெட் அகாடமியை பெங்களூருவில் பிசிசிஐ உருவாக்கி வந்தது. இந்த புதிய அகாடமியின் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த அகாடமி திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த அகாடமியில் மூன்று உலத்தரம் வாய்ந்த மைதானங்கள் உள்ளன. அத்துடன் 45 பயிற்சி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பயிற்சி, காயத்தில் இருந்து மீணடு வருவதற்கான பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    சிறந்த சூழ்நிலையில் தற்போதைய வீரர்கள் மற்றும் எதிர்கால வீரர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமி சின்னசாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய கிரிக்கெட் அகாடமி தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ×