search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாஷ் சாப்லே"

    • ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
    • சாப்லே 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    பிரஸ்சல்ஸ்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    கென்ய வீரர் முதலிடமும், மொராக்கோ வீரர் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 8 நிமிடம் 14.18 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.
    • இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.

     

    இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அவினாஷ் தகுதி பெற்றுள்ளார்.

     

     3000 மீ ஸ்டீப்பில் சேஸ் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.   

    ×