search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலம்பிக்ஸ் 2024"

    • ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது அமெரிக்கா.
    • ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது.

    அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது.


     

    33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.

    உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.

    நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.  



    அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மேடையில் தோன்றினார். அவர் மேற்கூரையில் இருந்து அந்தரத்தில் சாகசத்துடன் ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்று அவர் மோட்டார்சைக்கிளில் சென்றார். 

    'மிஷன் இம்பாசிபிள்' படம் போல் அவர் தன்னுடைய செயலை வெளிப்படுத்தினார். சில நிமிடங்கள் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

     


    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய நிறைவு விழா 3.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. 34-வது ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

    117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.

    இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை. 

    ×