search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோ பார்க்கிங்"

    • அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
    • விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    சென்னையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ (அ) வணிக நிறுவனமோ, 'NO PARKNG' என்ற பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், "சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் "நோ பார்க்கிங்" சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது மற்றும் முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.

    சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி. "நோ பார்க்கிக் பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

    மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:-

    * அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    * அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

    * பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    * வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது.
    • கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.
    • ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், ஒருகட்டத்தில் விரக்தியாகி தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

    ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ×