என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஓய்வூதிய திட்டம்"

    • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இத்திட்டம் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என தகவல்.

    ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதாவது, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

    25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவித்துள்ளது.

    ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியருக்கு, குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊழியர்கள் என்பிஎஸ், யுபிஎஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் எனவும், இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும்.
    • விரைவில் வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    சென்னை:

    சட்டசபையில் எழிலரசன் (தி.மு.க.) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-

    புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள்.

    இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக்கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை.

    விரைவில் அந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதலின் படி அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×