search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்எல்ஏக்கள் குழு"

    • பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
    • பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து அவருக்கு பலமுறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    இடையில் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மே மாதம் 10-ந்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக டெல்லி பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், "அரசியலமைப்பு நெருக்கடி" தொடர்பாக ஆம் ஆத்மி அரசை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    இதற்கிடையே பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    ×