என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குச்சந்தை வீழ்ச்சி"

    • தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
    • அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

     இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.  மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 இல் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஏற்பட்ட 1.24% சரிவில் [1,017.23 புள்ளிகளில்] 538 புள்ளிகளைக் கொண்டுள்ளன. 

    • இந்தியாவுக்கான அந்நிய முதலீடுகள் குறைந்து வருகின்றன.
    • இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் அச்சுறுத்தலாக உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியை ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் சந்தித்து பேட்டி எடுத்தார்.

    பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி மனம் திறந்து பேசினார். நானும் மனிதன் தான், கடவுள் அல்ல என்று அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமரை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவுக்கு பிறகே பிரதமர் தன்னை தெய்வப் பிறவி இல்லை என்பதை உணர்ந்துள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    தான் தெய்வப் பிறவி என்று கூறி வந்த பிரதமா் மோடி, பங்குச் சந்தையில் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.1.72 லட்சம் கோடி வெளியேறிய பிறகே, 'தாம் ஒரு மனிதன் தான்' என்று மறுகண்டுபிடிப்பு செய்துள்ளாா்.

    இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் மீதான முறைகேடு குற்றச்சாட்டு ஆகியவற்றால் இந்திய வா்த்தகம் மீது அந்நிய முதலீட்டாளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடுகள் வெளியேறி உள்ளன.

    வியட்நாம் , மலேசியாவை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான நேரடி அல்லது மறைமுக அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    ×