search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டாரு தத்தாத்ரேயா"

    • பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது.
    • காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்- மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.

    அரசமைப்புச் சட்டத்தின் கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

    அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ந் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ந் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மாநிலத்தில் அக்டோபா் 5-ந் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.

    இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை கவர்னர் நேற்று (வியாழக்கிழமை) கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். அரியானா பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×