என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெந்தயக்கீரை-பட்டாணி பால் கூட்டு"
- வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.
- உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது.
வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்து மலச்சிக்கலையும் போக்கும்.
கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத்தையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை-1 கட்டு
பட்டாணி- 50 கிராம் (ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளுங்கள்)
வெண்ணெய்- 3 ஸ்பூன்
பால்- 100 மி.லி
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
சர்க்கரை- 1 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம் 1
முந்திரி பருப்பு 5
பச்சைமிளகாய் 4
இஞ்சி சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 2
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு காய்ந்ததும் வெங்காயத்தை நறுக்கிப்போடுங்கள். முந்திரி பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்றவைகளையும் கலந்து நன்றாக வதக்க வேண்டும். ஆறிய பின்னர் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை தாளித்து, வெந்தய கீரை மற்றும் வேக வைத்த பட்டாணியையும் அதில் சேர்க்க வேண்டும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். சிறு தீயில் வேகவைத்து இறுதியாக பாலையும் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பின்பு உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
இந்த பட்டாணி பால் கூட்டு சப்பாத்திக்கு அதிக சுவை தரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்