என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகாஏலம்2025"

    • இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தான முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க இருக்கிறது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

    ஆர்டிஎம் கார்டுகளை எத்தனை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இதில் பங்கு பெற்ற அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினர். எனினும் பெரும்பாலான அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மூன்று வீரர்களை ஆர்.டி எம் கார்டு வைத்து மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் இதற்கு சில அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது.

    இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் முன்னணி வீரர்கள் வெறும் ஐந்து வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என்ற எண்ணிக்கையையும் பிசிசிஐ இறுதிச் செய்ய உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த ஐந்து வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்களுமே உள்ளூர் வீரராக இருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் ஐந்து வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். ஆர்டிஎம் வசதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியானால் அது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு அது பெரிய இடியாக வந்து விழும்.

    பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒவ்வொரு அணியும் UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.
    • வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது.

    இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.

    அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.

    வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். இது அவரது ஒப்பந்தத் தொகைக்கு கூடுதலாக இருக்கும். அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

    வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது.

    ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும்

    ஐபிஎல் தொடர் துடங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார்.

    இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2025 முதல் 2027 வரையிலான காலகட்டம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
    • ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.

    மும்பை :

    ஐபிஎல் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது.

    ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

    நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.

    அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.

    இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது.
    • கடந்த 3 சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார்.

    ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ரசல் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும். வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பதை அறிவித்து விடும்.

    அந்த வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மீதுதான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்து தற்போது இந்திய அணிக்கு சென்றுள்ள நிலையில் கேகேஆர் அணியில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் கேகேஆர் அணியில் முதல் வீரராக ரசல் தக்க வைக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அவர் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா ஆகியோரை தக்கவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மீது கேகேஆர் ஆர்வம் காட்டவில்லை. அவரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் என நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கேகேஆர் ஆர்வம் காட்டி வருகிறது.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
    • ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.

    ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

    • லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது.
    • டெல்லி அணி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு அணி தான் தக்க வைக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் சிஎஸ்கே நிர்வாகம் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ருதுராஜ், ஜடேஜா, துபே, பத்திரனா, டோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    லக்னோ அணி கேஎல் ராகுலை கழற்றி விட்டது. அந்த அணியில் பூரன், பிஷ்னோய், மயங்க் யாதவ், பதோனி, மோசின் கான் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரசலை கழற்றி விட்டது. நரேன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ரானா ஆகியோரை தக்க வைத்துள்ளது.

    ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மும்பை அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பாண்ட்யாவையும் மும்பை தக்கவைத்துள்ளது.

    டெல்லி ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை. அந்த அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் இன்னும் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

    • 5 பேரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
    • 2 வருடமாக சிஎஸ்கே அணிக்காக கான்வே விளையாடி உள்ளார்.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் கான்வே விடுவிக்கப்பட்டார். 2 வருடம் ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே ஏலத்தில் வரும் பட்சத்தில் இவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவான் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை விடுவித்தது.
    • ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என பட்லர் கூறினார்.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி மட்டும் 6 வீரர்களை தக்க வைத்தது.

    அந்த வகையில் 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி). ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    இந்நிலையில் ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என தன்னை விடுத்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி. 

    • ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

    ஏலத்திற்கான இடமாக சவுதிஅரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களை பரிசீலனை செய்த இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதியில் சவுதியின் துறைமுக நகரான ஜெட்டாவை தேர்வு செய்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதி ஆகிய இரு நாட்கள் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து 91 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்திற்கு முன்பாக இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

    ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் போக 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது.

    • இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார்.
    • அபாரமான பேட்டிங் திறமையால் ஆயுஷ் மத்ரே, டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.

    அடுத்த ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் சீசனுக்கு பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் வைத்து மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை மெகா ஏலம் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் எந்த மாதிரியான வீரர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என திட்டம் தீட்டி வருகின்றன.

    அந்த வகையில், மும்பையை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஒருவர் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே, தனது அபாரமான பேட்டிங் திறமையால் டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் 5 ஆட்டங்களில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

    தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே, சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மின்னஞ்சல் மூலம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஆயுஷ் மத்ரேவை பயிற்சி ஆட்டங்களில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார்.

    இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் ஆயுஷ் மத்ரே சில நாட்கள் டோனியின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் ஐபிஎல் மெகா ஏலத்திலும் ஆயுஷ் மத்ரேவை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முயற்சிக்கும்.

    இது குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னையில் பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ள ஆயுஷ் மத்ரேவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அணியில் பல இளம் வீரர்களுக்கு டோனி பயிற்சி அளித்து வருகிறார். 

    • இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
    • என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    ×