என் மலர்
நீங்கள் தேடியது "வைபவ் சூரியாவான்சி"
- 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா 48 ரன்களும் சூரியகுமார்42 ரன்களும் அடித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையது ராஜஸ்தான் அணியில் வைபவ் சூரியவன்ஷி - ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார்.
14 வயதே ஆனா வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 35 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
- 13 வயதான வைபவ் சூரியாவான்சி சதம் விளாசினார்.
- அவர் 104 ரன்னில் அவுட் ஆனார்.
சென்னை:
ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் 13 வயது வீரரான வைபவ் சூரியன்வாசி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியன்வாசி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியாவான்சி படைத்தார்.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.
வைபவ் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி வரலாற்றில் இளம் அறிமுக வீரர் ஆனார், பீகார் அணிக்காக 12 வயதில் விளையாடி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார் . அவர் இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வைபவுக்கு 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.