search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதிய பாகுபாடு"

    • சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.
    • அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும்.

    சிறைகளில் சாதி அடிப்படையிலான பிரிவினையை தடுப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், சிறைகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் -பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடைமுறைகளை எடுத்துரைத்தது.

    * சிறையில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த கைதிகளை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வைப்பதை அனுமதிக்க முடியாது.

    * சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.

    * சாதிய அடிப்படையில் பாகுபாடு, வெறுப்பை விதைப்பது, அவமதிப்பு செய்வது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது.

    * சிறையில் உள்ள கைதிகளின் மன மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.

    * அரசியலமைப்பு பிரிவு 14, 17, 21-ல் உள்ளிட்டவற்றை மீறும் வகையில் உள்ள கையேடுகளை உடனே மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆணை பிறப்பித்தது.

    * அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

    * சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து சிறை விதிகளையும் 3 மாதத்துக்குள் மாற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    ×