என் மலர்
நீங்கள் தேடியது "பிங்க் ஆட்டோ"
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.
எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன.
- திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.
சென்னை:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.
தமிழக சட்டசபையில் சமூகநலத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் கீதா ஜீவன், 'சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட போலீஸ் துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் 'இளஞ்சிவப்பு' ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.
வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவியாக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்' என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் அதற்கான பணிகளை சமூக நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்களை, குறிப்பாக கணவனை இழந்த பெண்களை இணைத்து அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு சமூக நலத்துறை சார்பில் கருத்துரு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் 200 பெண் பயனாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்ட பயனாளிகளை, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' மூலம் தேர்வு செய்ய சமூக நலத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எப்போது வேண்டுமென்றாலும் இதற்கான நிதி ஒப்புதல் வழங்கி தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டவுடன், மானிய விலையிலான 'இளஞ்சிவப்பு' ஆட்டோ பெறும் பயனாளிகள் தேர்வு தொடங்கும் என சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல்கட்டமாக தலைநகர் சென்னையில் 250 பெண்களுக்கு 'இளஞ்சிவப்பு' ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்க சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை விரிவுப்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிங்க் ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
- மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாடு அரசு பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் போன்ற பல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பாக 'பிங்க்' ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இந்நிலையில், பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.