என் மலர்
நீங்கள் தேடியது "ரஞ்சி கோப்பை டிராபி"
- உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அபிமன்யு 127 ரன்கள் குவித்தார்.
- தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
ரஞ்சி கோப்பை டிராபியில் உத்தர பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக சுதீப் சட்டர்ஜி சதம் விளாசினார். இதனையடுத்து உத்தரபிரதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஆர்யன் ஜூயல் 92 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் 19 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் மட்டும் இழந்து 254 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் உத்தரபிரதேசம் அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அவர் அசத்தி உள்ளார். முதல் தர போட்டியில் இது அவருக்கு 27-வது சதம் ஆகும். இதனால் அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேக்-அப் இடத்திற்கு தகுதியானவராக இருப்பார் என அதிகாரிகள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விலக உள்ளதாக அந்த இடத்தை இவர் நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.
- டெல்லி அணியில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் உறுதி செய்துள்ளார்.
- மும்பை அணியுடன் இணைந்து ரோகித் சர்மா, வான்கடே மைதானத்தில் 2 மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோகித், விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
ரோகித் சர்மா ரஞ்சி டிராபியின் இரண்டாம் கட்டப் பயிற்சிக்கு முன்னதாக மும்பை அணியுடன் இணைந்து வான்கடே மைதானத்தில் 2 மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.
வருகிற 23-ந் தேதி ரஞ்சி டிராபி மீண்டும் தொடங்குகிறது. மும்பை அணிக்காக 2015-ம் ஆண்டில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக போட்டியில் ரோகித் சர்மா விளையாடி இருந்தார். மும்பை அணியின் அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதே போல விராட் கோலி, சுப்மன்கில், ரிஷப்பண்ட் ஆகியோரும் ரஞ்சி டிராபியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணியில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரொஹன் ஜெட்லி, "டெல்லியின் அடுத்த ரஞ்சி டிராபி போட்டியான சவுராஷ்டிராவுக்கு எதிராக ரிஷப் பண்ட் விளையாட உள்ளதாக உறுதி செய்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
அதேசமயம் விராட் கோலியும் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.