என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கல் டிக்கெட்"

    • தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதிகள் உள்ளன.
    • பிரீமியம் தக்கலுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

    ரெயில்களில் உடனடியாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது நாளை பயணம் மேற்கொள்ள இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

    ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதி உள்ளது. பிரீமியர் தக்கலில் டிக்கெட் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், தேவைக்கேற்ப டிக்கெட் விலை ஜெட் வேகத்தில் உயரும். ஆனால் இரண்டுக்குமான பதிவு நேரம் ஒன்றுதான்.

    ஆனால், தக்கல் மற்றும் பிரீமியர் தக்கலுக்கு வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

    ஆனால், தற்போதுள்ள முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விரைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களுக்கு பொதுமக்கள் எப்போதும் நாடுவது ரெயில் பயணங்களையே. இதனால் முக்கிய ரெயில்களில் காத்திருப்போர் வரிசை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, திட்டமிடாத திடீர் பயணங்களுக்கு டிக்கெட் பொதுமக்கள் அதிகம் நாடுவது தட்கல் டிக்கெட்டுகளையே. இதன்மூலம் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடாதவர்களும் பாதுகாப்பான ரெயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

    டிக்கெட் கவுன்டர்கள் மட்டுமல்லாமல், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போதைய நிலையில், மொத்த ரெயில் டிக்கெட்டுகளில் 80 சதவீதம் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரெயில் பயணி ஒருவர் கூறுகையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் எனது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் மூலம் இணைத்து பதிவு செய்துள்ளேன். டிக்கெட் எடுக்கும் நேரத்தில் கால நேர விரயம் ஏற்படுவதை தடுக்க ஆர்-வாலட் மூலம் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றும், பணம் செலுத்திய சிறிது நேரம், இணையதளம் முடங்கி, பின்னர் 5 நிமிடங்கள் கழித்து நேரம் முடிவடைந்து விட்டது என்றோ அல்லது கேப்சா சரியாக பதிவேற்றப்பட வில்லை என்றோ தகவல் வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்கள் வரை எனக்கு இந்த பிரச்சினை இல்லை. கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்சினையை சந்திக்கிறேன். காலை 10 மணிக்கு தொடங்கும் ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகள் எடுப்பதில் எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால் ஏ.சி. அல்லாத டிக்கெட் எடுக்கும் போது மட்டுமே பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

    இதே போல் மற்றொரு ரெயில் பயணி கூறுகையில், நான் மதுரையிலிருந்து அடிக்கடி தொழில் விஷயமாக வடமாநிலங்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அவசர பயணங்களுக்காக, மொபைல் ஆப் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் புக் செய்யும் போது, இணையதளம் முடங்கி விடுகிறது. நான் அதிக வேகமுடைய இன்டர்நெட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முயன்றாலும் என்னால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற நேரங்களில் ரெயில் டிக்கெட் ஏஜென்டுகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள்.

    இது எப்படி என்று தெரியவில்லை. என அதிருப்தி தெரிவித்தார்.

    அதிகளவில் பயணிகள் டிக்கெட் பெறுவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் சாதாரண பயணிகள் இணையதளம் மூலமாக தட்கல் உள்ளிட்ட ரெயில் டிக்கெட்டுகளை பெறுவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ரெயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை.
    • முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.

    பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தக்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.

    பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைப்பது இல்லை. எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை. இதில் இடைத்தரகர்கள் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா என ரெயில்வே வணிகத் துறையோடு இணைந்து பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    கடந்த சில மாதங்களாக தட்கல் டிக்கெட் விற்பனையை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட சில முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் தினமும் அதிகளவில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற முறைகேடு நடந்து இருந்தாலும் தெற்கு ரெயில்வே மூலமே இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்யும் போது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து இறுதியாக பணம் செலுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த நடைமுறை முற்றுப்பெறும். இந்த நடைமுறைகளை மேற்கொள்ள 2, 3 நிமிடங்கள் ஆகிவிடும். ஆனால் புரோக்கர்கள் சட்டவிரோதமாக போலி சாப்ட்வேர் தயாரித்து முன்பதிவுக்கான நடைமுறைகள் எதுவும் இல்லாமல் நேரடியாக மிக எளிதாக டிக்கெட் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தி இதுவரையில் புக்கிங் செய்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

    பெயர், வயது, செல்லும் இடம், தேதி போன்றவற்றை மட்டும் பதிவு செய்து பணத்தை செலுத்தும் இந்த சாப்ட்வேர் மூலம் விரைவாக முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட்டினை பெற முடியும் என்பதை ரெயில்வே அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்புள்ள 7506 டிக்கெட்டுக்கள் தெற்கு ரெயில்வேயில் மட்டும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் 404 இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது 391 வழக்குகள் பதிவு செய்து கைதாகியுள்ளனர்.

    இந்த மோசடியில் ஐ.ஆர்.சி.டி.சி. முகவர்களும் சிக்கியுள்ளனர். 119 முகவர்கள் சாப்ட்வேர் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் ஐ.டி. முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதே போல 2003 ஐ.ஆர்.சி.டி.சி. ஐ.டி.களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதனையும் முடக்கி வைத்துள்ளனர். மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்வதிலும், தக்கல் முன்பதிவிலும் இந்த முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×