என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுஷ் மத்ரே"
- ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் இழந்ததை அடுத்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவை சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார்.
- அபாரமான பேட்டிங் திறமையால் ஆயுஷ் மத்ரே, டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் சீசனுக்கு பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் வைத்து மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை மெகா ஏலம் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் எந்த மாதிரியான வீரர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என திட்டம் தீட்டி வருகின்றன.
அந்த வகையில், மும்பையை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஒருவர் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே, தனது அபாரமான பேட்டிங் திறமையால் டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் 5 ஆட்டங்களில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே, சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மின்னஞ்சல் மூலம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஆயுஷ் மத்ரேவை பயிற்சி ஆட்டங்களில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார்.
இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் ஆயுஷ் மத்ரே சில நாட்கள் டோனியின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் ஐபிஎல் மெகா ஏலத்திலும் ஆயுஷ் மத்ரேவை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முயற்சிக்கும்.
இது குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னையில் பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ள ஆயுஷ் மத்ரேவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அணியில் பல இளம் வீரர்களுக்கு டோனி பயிற்சி அளித்து வருகிறார்.
- விஜய் ஹசாரே தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
- இதில் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீஷா சுசித் 104 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் 117 பந்தில் 181 ரன்கள் குவித்த மும்பை அணி வீரர் ஆயுஷ் மத்ரே புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி லிஸ்ட் ஏ தொடரில் இளம் வயதில் 150 ரன்கள் மேல் குவித்த வீரரான ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை ஆயுஷ் மத்ரே முறியடித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். மத்ரே 17 ஆண்டுகள் 168 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.