என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் நடை திறப்பு"

    • திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு.
    • கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஆகியோரை மிதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    பிறகு, கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×