என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜின் டிரைவர்"

    • மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
    • ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.40 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் நிற்காமல் சென்றது. ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில் திருவள்ளூர் சென்றவுடன் ரெயில்வே அதிகாரிகள் டிரைவரை மாற்றி வேறு ஒரு டிரைவரை மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் டிரைவரிடம் தூக்க கலக்கத்தில் ரெயிலை இயக்கினாரா? அல்லது கவனக்குறைவால் நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
    • பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.

    ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.

    இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.

    பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.

    பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.

    ×