என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை-தாம்பரம்"

    • சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கைது.
    • குழந்தைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

    தாம்பரம்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பிச்சை எடுக்கும் பல பெண்களை காணலாம். அவர்கள் பெரும்பாலும் வடமாநில பெண்களாக இருப்பார்கள். கையில் கைக் குழந்தை ஒன்றை வைத்து இருப்பார்கள்.

    அந்த குழந்தைகள் சரியான உணவு, பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கும். அதேபோல் அந்த பெண்களும் இளம் வயதினராக இருப்பார்கள்.

    அவர்களும் சரியான உணவு கிடைக்காமல் கந்தலான உடையில் பார்க்க பரிதாபமாக இருப்பார்கள். இந்த மாதிரி வரும் பெண்கள் ஓடும் ரெயில்கள், மக்கள் கூடும் இடங்கள், சிக்னல்களில் நின்று பொதுமக்களிடம் 'அய்யா பசிக்குதுய்யா.... ஏதாவது குடுங்கய்யா...' என்று கையேந்துவார்கள்.

    அவர்களின் நிலைமையை பார்த்து இரக்க மனம் கொண்ட பலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரி நடமாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மாதிரி பிச்சை எடுத்து வரும் பெண்களை தாம்பரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வைத்து இருந்தது அவர்களின் குழந்தைகள் அல்ல என்பதும் அவர்கள் திருடிய குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது குழந்தைகளையும் பறிமுதல் செய்தார்கள்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு நலவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முகாம்களில் இருக்கும் குழந்தைகளை மீட்க எந்த பெண்ணும் ஆர்வம் காட்டவில்லை.

    இதன் மூலம் அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைத்தும் பச்சிளம் குழந்தைகள் என்பதால் அவர்களால் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் பொதுமக்களை உஷார்படுத்தி இருக்கிறார்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரி பிச்சை எடுக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    மேலும் இந்த மாதிரி குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களை ரெயில்களிலோ, பொது இடங்களிலோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக போலீஸ் உதவி எண். 139-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    • செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது.
    • அடிப்படை கட்டணம் 10 கி.மீட்டருக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை நகரில் ஏ.சி. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏ.சி. வசதி கொண்ட மெமு ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில், அதாவது டிசம்பர் இறுதிக்குள் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல் ஏ.சி. மெமு ரெயில் தயாராக உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    முதல் ஏ.சி. மெமு ரெயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை இறுதி செய்துள்ளோம். ஆனால் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.

    சாதாரண ஏ.சி. மெமு ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் 10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 491 முதல் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.423 ஆகும்.

    11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும்.

    10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.590 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.445 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எழும்பூர் - தாம்பரம் இடையே 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1,200 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.900 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.605 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் சென்னை - திருவள்ளூர் இடையே டிக்கெட் கட்டணம் ரூ.85 ஆகவும், சென்னை-செங்கல்பட்டு இடையே ரூ.99 ஆகவும், சென்னை - திருத்தணி இடையே ரூ. 123 ஆகவும், சென்னை - திருப்பதி இடையே ரூ.170 ஆகவும், சென்னை - புதுச்சேரி இடையே ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.

    ×